News December 14, 2025
வையப்பமலை அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

வையப்பமலை அருகே இராமாபுரம் அடுத்த மாந்தோப்புகாலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37) குடும்ப தகராறில் மனவிரக்தி அடைந்து நேற்று விஷம் குடித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.13) இறந்து விட்டார். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை..!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 16, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.16) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (நல்லதம்பி – 9498168985) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 16, 2025
திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுமையால் விபரீதம்!

திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்து (26) என்பவர், ரூ.3 ஆயிரம் கந்து வட்டிக்கு வாங்கிய நிலையில், அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. வட்டியுடன் பணம் செலுத்திய பின்னரும் அசல் மற்றும் அபராத வட்டி கேட்டு நேற்று இரும்புக் கம்பியால் தாக்கியதில் முத்து ரத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


