News December 14, 2025
கிருஷ்ணகிரி: கிணற்றில் விழுந்து இளம் பெண் பலி!

கிருஷ்ணகிரி, அருகேநரசிபுரம் கிராமத்தில் வசித்து வரும் லோகேஷ் என்பவரின் மகள், பலவனபள்ளியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று (டிச-13) மதியம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளார். இதில் சுமார் 15அடி ஆழமுள்ள குளத்தின் அருகே சென்றபோது கால் தவறி குளத்தில் விழுந்தது தெரியவந்து. பின் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
Similar News
News March 6, 2026
கிருஷ்ணகிரி: குஷியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கான விற்பனை மதி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் நேற்று திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் ஊரக வாழ்வாதார இயக்குநர் பெரியசாமி கலந்து கொண்ட நிலையில்,விற்பனை தொடங்கியது.
News March 6, 2026
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்தர்ஜித் அவருடைய நண்பர் நிரஞ்சன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடிரென இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் தவறி விழுந்தது. இதில் நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தர்ஜித் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 6, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


