News December 14, 2025

குமரியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தக்கலை ஆசான்கிணறு பகுதி ஜெயவேல் – மல்லிகா தம்பதியின் மூத்தமகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். பத்மநாபபுரம் அரண்மனை பகுதியில் கடை நடத்தி வரும் மல்லிகா, நேற்று மதியம் மகளுக்கு போன் செய்த போது அவர் போனை எடுக்காததால் சந்தேகத்துடன் வீட்டுக்கு வந்த போது வீடு திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகள் மின் விசிறியில் தூக்கில் இறந்த நிலையில் காணப்பட்டார். தக்கலை போலீசார் விசாரணை.

Similar News

News December 28, 2025

குமரி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்..

image

குமரியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <>லிங்க<<>> மூலம் செயலியில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும். தகவலை SHARE பண்ணி உதவுங்க.

News December 28, 2025

குமரி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

image

குமரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 28, 2025

குமரி: போதையில் கீழே விழுந்து ஊழியர் பலி!

image

திருவனந்தபுரம் அருகே அருவிக்கரையைச் சேர்ந்தவர் புகாரி (52). இவர் தற்போது கல்லுக் கூட்டம் என்ற இடத்தில் வசித்து வந்தார். கோழிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் எற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!