News December 14, 2025
புதுகை: வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் அதிரடி கைது!

பொன்னமராவதி, வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்ற வாலிபர் மர்மமாக இறந்து கிடந்ததார். இதுகுறித்த வழக்கில் காரையூர் போலீசார் சக்திவேல் (38), அஜித் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெரும் பாண்டியனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News December 16, 2025
புதுகை: பண இழப்பை தவிர்க இத செய்ங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
புதுகை: பைக்குகள் நேருக்கு நேர் மோதல்-ஒருவர் பலி

திருமயம் அடுத்த துளையானூர் சாலையில் தர்மராஜ் (51) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த ராஜேஷ் (18) மோதியதில் படுகாயம் அடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஸ்ரீபிரியா (33) அளித்த புகாரின் பேரில் திருமயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
புதுகை: மனைவியுடன் மனக்கசப்பு-கணவன் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (54). இவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று எல்.என்.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மது போதையில் மதிவாணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி கலா ராணி (43) அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


