News April 29, 2024

₹4 கோடி பறிமுதல் வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்றபோது, இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மே 2 ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News August 13, 2025

கிச்சனில் அதிக நேரம் இருந்தால் கேன்சர் அபாயம்?

image

ஆண்களின் நோயாக கருதப்பட்ட நுரையீரல் கேன்சர், பெண்களை அதிகளவில் பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் சமைக்கும் போது வரும் அதீத புகையால் பெண்கள் நுரையீரல் கேன்சருக்கு ஆளாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சமைக்கும்போது வெளியாகும் புகை உள்ளேயே சுற்றுவதால் மூச்சுத்திணறலில் தொடங்கி கேன்சர் வரை ஏற்படுமாம். இதனால் கிட்சன் காற்றோற்றமாக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News August 13, 2025

ரஜினி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லோகேஷ்!

image

கூலி படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு லோகேஷ் இன்றிரவு ஷாக் கொடுத்துள்ளார். அப்படம் LCU-வில் வருமா இல்லையா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூலி படம் LCU-வில் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அது தனிக்கதையாக இருக்கும் என விளக்கம் அளித்த அவர், படம் பார்ப்பவர்கள் ‘ஸ்பாய்லர்’ செய்யாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News August 13, 2025

BREAKING: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்

image

ICICI வங்கியை தொடர்ந்து HDFC வங்கியும் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆக.1 முதல் கணக்கு தொடங்கியவர்களுக்கு நகர்ப்புற சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் ₹10,000-லிருந்து ₹25,000-மாகவும், ஊரகப் பகுதிகளில் இந்த தொகை ₹10,000-மாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள மற்றும் BSBDA கணக்குகளுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. பழைய வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

error: Content is protected !!