News December 14, 2025
பவானி அருகே சோகம்: ஒருவர் பலி

பவானி ஜிஎஸ்காலனி புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாந்தப்பன் 54. இவர் சித்த வைத்தியம் பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஆண்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வரும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கவுந்தப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 5, 2026
ஈரோடு மாவட்டம் 3-ம் இடம் பிடித்து சாதனை!

மத்திய அரசின் 2025-26 கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பயர் விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,336 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 97 மாணவர்கள் இடம் பெற்று மாநில அளவில் 3-ம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக 45 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி தனியார் பள்ளிக்கு இணையான புத்தாக்க சிந்தனையை நிரூபித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச்.04) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
ஈரோடு: GAS BILL-ஐ விட அதிக பணமா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


