News December 14, 2025
SIR படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசிநாள்

TN முழுவதும் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், வாக்குச்சாவடிகளில் BLO-க்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளனர். அதில், தங்களது படிவங்களை மறக்காமல் ஒப்படைத்துவிடுங்கள். இல்லை எனில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட வாய்ப்புள்ளது. வரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
Similar News
News April 7, 2026
டேவிட் வார்னர் கைது

Ex ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை சிட்னி போலீஸ் கைது செய்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 மடங்கு அதிகம் குடித்திருந்ததால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆஸி., சட்ட விதிகளின்படி வார்னருக்கு குறிப்பிட்ட காலம் சிறை தண்டனையுடன், $2,200 அபராதமும் விதிக்கப்படலாம். மிகப்பெரிய பிரபலமாக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றே ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு குடிமகனும் நடத்தப்படுகின்றனர்.
News April 7, 2026
PM KISSAN அடுத்த தவணை எப்போது?

PM KISSAN திட்டத்தின் அடுத்த தவணை ₹2,000 வரவு வைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள விவசாயிகளை கண்டறிய விவசாயிகள் பதிவு எண் என்ற நடைமுறை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் விவசாயிகளுக்கும் இந்த ‘விவசாயி பதிவு’ மற்றும் தரவுச் சரிபார்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
News April 7, 2026
பாகிஸ்தான் துண்டு துண்டாகிவிடும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் போர் மூண்டால், கொல்கத்தாவை தாக்குவோம் என பாக்., அமைச்சர் குவாஜா பேசியதற்கு ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். பாக்., இதுபோன்ற ஆத்திரமூட்டும் கருத்துக்களை சொல்லக்கூடாது என அவர் கூறியுள்ளார். 55 ஆண்டுகளுக்கு முன்பு பாக்., 2-ஆக பிரிக்கப்பட்டதை நினைவுப்படுத்திய அவர், தற்போது பெங்கால் மீது கைவைத்தால் பாக்., எத்தனை துண்டுகளாகும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் எனவும் பேசியுள்ளார்.


