News December 14, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News March 4, 2026

புதுக்கோட்டை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?..APPLY

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 4, 2026

புதுக்கோட்டை: பாஜக போஸ்டரால் பரபரப்பு

image

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு வகைகள் நூதன பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, திமுக அரசை விமர்சித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டரில் பொதுமக்களுக்கு விலையில்லா குடிநீர் கொடுங்க, மாநகர பாஜக தலைவர் சீனிவாசன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 4, 2026

புதுக்கோட்டையில் துணிகரம்: கோயிலில் உண்டியல் திருட்டு

image

ஆலங்குடி அடுத்த கல்லாலங்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது 3 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!