News April 29, 2024
மழை அளவு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் வெப்பத்தினால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சில பகுதிகளில் மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஏப்.29) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் மொத்தமாக மாவட்டத்தில் 9 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Similar News
News January 14, 2026
நெல்லை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 14, 2026
நெல்லை: பண மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், உங்களது செல்போனில் ஆன்லைன் பகுதி நேர வேலை என கூறி டாஸ்க் வைத்து சிறிது பணத்தை உங்கள் கணக்கில் காண்பித்து நம்ப வைத்து உங்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் மோசடி நிகழ்வுகள் தற்போது அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இது குறித்து 1930-க்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
News January 14, 2026
நெல்லையில் பொங்கல் வேஷ்டி சேலை இல்லை

நெல்லை மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் நிலவும் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். டவுன், களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் வேட்டி இருந்தால் சேலை இல்லை என்ற நிலை உள்ளதால், ரேஷன் ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை கிடைக்காததைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கிறது.


