News December 14, 2025
பெரம்பலூர்: நேரில் உடல்நலத்தை விசாரித்த MP ஆ. ராசா

பெரம்பலூரில் (13.12.2025) வேப்பூர் கிராமம் பீல்வாடியில், கழக துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா, விபத்தில் காயமடைந்த மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் பீல்வாடி கே. ராமச்சந்திரன் உடல்நலத்தை விசாரித்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. துரைசாமி, வழக்கறிஞர் என். ராஜேந்திரன், டி.சி. பாஸ்கர், மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News March 6, 2026
பெரம்பலூர்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

குன்னம் தொகுதி, செந்துறை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 20-கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் திமுக செந்துறை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் பொன்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 6, 2026
பெரம்பலூர்: போலி அறக்கட்டளை நடத்திய 3 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் “VAO (Vigilance Awareness Organizations)” என்ற பெயரில் போலியான அறக்கட்டளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்த செல்லம் (55), தேவக்குமார் (55), பார்த்தசாரதி (35) ஆகிய மூன்று நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 5, 2026
பெரம்பலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️பெரம்பலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04328-296206
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


