News April 29, 2024
வெள்ளரி மோர் சர்பத் செய்வது எப்படி?

வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கக் கூடியது வெள்ளரி. கோடையில் அதிகமாக கிடைக்கும் வெள்ளரியை கொண்டு ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். வெள்ளரிக்காய், இஞ்சி, கொத்தமல்லி, நெல்லி, கற்றாழை, பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதில் மோரை ஊற்றி, சில வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்தால் சுவையான வெள்ளரி மோர் சர்பத் ரெடி.
Similar News
News November 15, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீரில் திரையுலகம்

இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் போரூர் ராமச்சந்திரா ஹாஸ்பிடலில் இருந்து கோடம்பாக்கம் வரை ஊர்வலமாக தற்போது எடுத்த செல்லப்படுகிறது. வழிநெடுக இயக்குநர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக கோடம்பாக்கம் இல்லத்தில் அவரது உடல் சற்றுநேரத்தில் வைக்கப்படவுள்ளது.
News November 15, 2025
பிஹாரில் காங்., தோல்வி: தமிழகத்தில் எதிரொலிக்குமா?

ஒருகாலத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்த காங்., தற்போது சீரியஸான நிலையில் இருக்கிறது. பிஹாரில் 61 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி வெறும் 6-ல் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால், தனித்து போட்டியிட்ட ஒவைசியின் AIMIM 5 இடங்களை கைப்பற்றியது. பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலியால், திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு வரும் காங்.,க்கு சீட் குறைக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 15, 2025
ஹைதராபாத் சாலைகளுக்கு கார்ப்பரேட் பெயர்கள்

ஹைதராபாத்தில் உள்ள சாலைகளுக்கு Google, Meta, TCS உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களை சூட்டவுள்ளதாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். ஹைதராபாத்தை தொழில் வளர்ச்சி நகரமாக மேம்படுத்தும் நோக்கிலும், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கிலும் இவ்வாறு அறிவிப்பதாக கூறினார். 2034-ம் ஆண்டுக்குள் மாநில பொருளாதாரம் 1 டிரில்லியனாகவும், 2047-க்குள் 3 டிரில்லியனாகவும் உயரும் என்றார்.


