News December 13, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு அப்டேட்

PM KISAN திட்டத்தில் இதுவரை 21 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த தவணைத் தொகையை பிப்ரவரியில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை தாமதிக்காமல் பெற e-KYC அப்டேட், நில ஆவண சரிபார்ப்பு, ஆவணங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்திருப்பது அவசியம். இதனை பென்டிங் வைத்திருப்பவர்கள், www.pmkisan.gov.in இணையதளத்தில் அப்டேட் செய்யுங்க
Similar News
News March 4, 2026
மார்ச் 4: வரலாற்றில் இன்று

*தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள் *உலக உடல் பருமன் நாள் *1931–இந்தியாவில் அனைவரும் உப்பை கட்டுப்பாடின்றி பயன்படுத்த பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் வூட் & காந்தி இடையே ஒப்பந்தம் கையெழுத்து *1944–அரசியல்வாதி மூ.அருணாச்சலம் பிறந்தநாள் *1978–விடுதலை போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு நாள் *1980–டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா பிறந்தநாள் *2022–கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே நினைவு நாள்
News March 4, 2026
கச்சா எண்ணெய்: இந்தியாவுக்கு உதவ ரஷ்யா ரெடி

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட ரஷ்யா முன்வந்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்ப ரஷ்யா தயாராக உள்ளதாகவும், போர் நிலவரத்தை பொறுத்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவில் 40-45 நாள்களுக்கான கச்சா எண்ணெய் & பெட்ரோலிய பொருள்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
TN-ல் சாதிவெறி, கலவர அரசியல்.. இயக்குநர் ஆதங்கம்

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது அதிகார வெறிக்காக வளர்த்தெடுத்த சாதிவெறியே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் என லெனின் பாரதி விமர்சித்துள்ளார். X பதிவில் அவர், திருப்பரங்குன்றத்தில் இல்லாத தீபத்தூணை வைத்து கலவர அரசியலை RSS செய்கிறது என்றும், வெற்று திரைக்கவர்ச்சி அரசியல் மட்டுமே தவெகவிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். TN இன்னும் என்னவெல்லாம் பார்க்கபோகிறதோ எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


