News December 13, 2025

தருமபுரியில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி!

image

தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி வனக்கோட்டத்தில் நடப்பு ஆண்டில் ஈர நிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி வரும் 27,28 தேதிகளில் நடக்க உள்ளது. பறவைகள் பற்றி நன்கு அறிந்தவர்களும் பறவைகளை அடையாளம் காணத் தெரிந்தவர்கள், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 26 ஆம் தேதி மாலைக்குள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்த்துள்ளார்.

Similar News

News December 16, 2025

தருமபுரி: விபத்தில் உயிரிழந்தவருக்கு MLA ஆறுதல்!

image

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நடந்த விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதை, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இன்று (டிச.16) நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியனார். உடன் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இருந்தனர்.

News December 16, 2025

தருமபுரி: போட்டித் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு. “துணை ஆய்வாளர்” பதவிக்கான முழு மாதிரி தேர்வு, நாளை (17/12/2025) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. எனவே தேர்விற்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News December 16, 2025

தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!