News April 29, 2024

ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி திடீர் பழுது

image

ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்றிரவு ஒரு சிசிடிவி பழுதானது. அங்கு 220க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், ஒரு கேமரா மட்டும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை செயலிழந்தது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜகோபால், IP முகவரியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பழுதானதாக விளக்கமளித்துள்ளார். ஏற்கெனவே, நீலகிரியில் சிசிடிவி செயலிழந்தது சர்ச்சையானது.

Similar News

News February 8, 2026

இனி சேப்பாக்கத்தில் விசில் போட முடியாது

image

NZ, AGF இடையேயான உலகக் கோப்பை போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. விசிலுக்கான தடை குறித்து ICC, BCCI தரப்பில் எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News February 8, 2026

நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு HAPPY NEWS

image

<<19007011>>கல்விக் கடன், மாற்றுத் திறனாளி கடன்<<>> போன்றவை தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலைப்போல், இப்போதும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான நடவடிக்கையை திமுக அரசு தொடங்கிவிட்டதாம். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகைக் கடன் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் நல்ல செய்தி வெளியாகும்.

News February 8, 2026

EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி!

image

டாடா மோட்டார்ஸ் தனது EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக TATA Curvv மாடலுக்கு, வேரியண்ட்களை பொறுத்து ₹3.80 லட்சம் – ₹3.30 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் Harrier (₹1.5 லட்சம்), Punch (₹1.6 லட்சம்), Tiago (₹1.5 லட்சம்), மற்றும் Nexon (₹1.2 லட்சம்) ஆகிய மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!