News December 13, 2025

பெரம்பலூர்: டிசம்பர் 31-க்குள் இத செய்ங்க

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் eKYC 31.12.2025-க்குள் 100% முடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டை பயனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை அடிப்படையிலான சரி பார்ப்பினை (eKYC) அவசர சிறப்பு பணியாக கருதி 31.12.2025-க்குள் 100% நிறைவு செய்ய பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

பெரம்பலூர்: பெண் குழந்தை உள்ளதா? APPLY NOW!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், வருகிற 30-ம் தேதி மாலை 5 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சமையல் சிலின்டர்கள் வழங்குவதில் தாமதம் மற்றும் நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

பெரம்பலூர்: கார் விபத்து- இளம் பெண் பலி!

image

அரியலூர், செந்துறை ரவுண்டானா பகுதியைச் சேர்ந்த 5 பேர், நேற்று பெரம்பலூரிலிருந்து படம் பார்த்துவிட்டு மாலை காரில் வீடு திரும்பும் பொழுது, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதி அருகே மாடு ஒன்று குறுக்கே வந்ததால், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கார்த்திகா (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இது குறித்த குன்னம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!