News December 13, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 27.12.2025 அன்று தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் https://forms.gle/aUm1sGfrogXtLBjc6 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது தொடர்பு எண்னை: 04324-223555. அழைக்கலாம் என ஆட்சியர் தங்கவேல் தகவல் தெரிவித்தார்.
Similar News
News December 15, 2025
கரூர் அருகே விபத்து; பெண் படுகாயம்

கரூர்-அரவக்குறிச்சி சாலையில் பாலகிருஷ்ணன், செல்வி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லோகேஷ் ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வேனுடன் மோதியது. இந்த விபத்தில் செல்வி படுகாயமடைந்து, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரவக்குறிச்சி போலீசார் சம்பவத்துக்காக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
கரூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 15, 2025
கரூர் அருகே அதிரடி கைது..!

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே வடக்கு மேட்டுப்பட்டி மந்தையில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய தகவலின் பேரில் வெள்ளியணை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சத்யராஜ் (26), குமார் (35), நவீன் (26) ஆகிய மூவரையும் கைது செய்து, 52 சூதாட்ட சீட்டுகள் மற்றும் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.


