News April 29, 2024

உச்சநீதிமன்றத்தை நாடினார் ராஜேஷ் தாஸ்

image

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2021இல் பதியப்பட்ட வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Similar News

News August 21, 2025

செல்போன் ரீசார்ஜ்… அடுத்த அதிர்ச்சி கொடுத்த ஜியோ!

image

ஜியோ, தனது பயனாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அண்மையில் ₹249 ரிசார்ஜ் பிளானை நிறுத்தியதை போலவே, தற்போது ₹799 ரீசார்ஜ் (84 நாள் Validity) பிளானை நிறுத்தியுள்ளது. இதே பிளான், JioSaavn Pro சப்ஸ்கிரிப்ஷனுடன், தற்போது ₹899-க்கு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் ரிசார்ஜ் கட்டணங்களும் 15- 20% வரை உயரும் எனக் கூறப்படுகிறது.

News August 21, 2025

பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு

image

PM, CM தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவியில் இருந்து நீக்கம் செய்யும் மசோதாவுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால், அவர்களது பதவி பறிக்கப்படுவது சரிதானே; அப்போதுதான் ஒழுங்கு இருக்கும், இதுபோன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்த்திருத்தங்கள் தேவை எனவும் கூறியுள்ளார்.

News August 21, 2025

மாநாடு: பெண்கள் பாத்ரூமை ஆண்கள் பயன்படுத்தும் நிலை

image

தவெக மாநாட்டுத் திடலில் பெண்கள் கழிப்பறையை ஆண்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குடிநீர் குழாயில் காற்று மட்டுமே வருவது, ஸ்நாக்ஸ் அனைவருக்கும் செல்லாமல் இருப்பது என சில குறைகள் கூறப்படுகின்றன. வெயிலும் கொளுத்துவதால் தொண்டர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

error: Content is protected !!