News December 13, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (டிச.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News December 13, 2025

ராமநாதபுரம்: 10th தகுதி.. மத்திய அரசு வேலை ரெடி

image

ராமநாதபுரம் மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க.

News December 13, 2025

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ராமநாதபுரம் சிறுமி

image

ஆர்.எஸ்.மங்கலம் ரமேஷ் மகள் சர்விகா 5. வின்னர்ஸ் மெட்ரிக் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். ஜாக்கி உலக சாதனைக்காக, தமிழ் எழுத்துகளான உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து என மொத்த தமிழ் எழுத்துக்களான 247 எழுத்துக்களை 17 நிமிடங்களில் எழுதி சிறுமி சர்விகா சாதனை படைத்தார்.இளம் வயதிலே உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

News December 13, 2025

இலங்கை சிறையிலிருந்து தொண்டி மீனவர்கள் விடுதலை

image

தொண்டி அருகே நவ.,3 ல் நம்புதாளையைச் சேர்ந்த ரமேஷ் நாட்டுப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த மூவருடன் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த அவர்களை நேற்று நீதிமன்றம் விடுதலை செய்தது.4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. படகும் விடுவிக்கப்பட்டது.

error: Content is protected !!