News December 13, 2025
கரூர்: கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கரூர் மாவட்டப்பிரிவு
தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் https://awards.tn.gov.in இந்த இணையதளத்தில், 15.12.2025 தேதிக்குள் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
கரூரில் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், விவசாய மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சாதாரண பிரிவில் விண்ணப்பித்தவர்கள் தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.
News December 26, 2025
கரூர்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
கரூரில் சட்டவிரோத மது விற்பனை; 4 பேர் கைது

கரூர் மாவட்டம் வெள்ளியணை, பசுபதிபாளையம், வாங்கல், மாயனூர் காவல் நிலைய எல்லைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய ரெய்டில் தமிழ்செல்வன் (36), கணேசன் (37), பிரபு (42), சிவானந்தம் (31) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


