News December 13, 2025

மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை திருப்­பாலையை சேர்ந்­த சண்­மு­க­நாதனுக்கு சொந்­தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்­பட்டியை சேர்ந்த சண்­மு­க­நாதன் என்­பவர் பெயர் ஒற்­று­மையை பயன்­படுத்தி மோ­ச­டி­யில் ஈடு­பட்டார். மத்­தி­ய­ குற்­றப்­பி­ரிவு போலீ­சார் வழக்கு பதி­வு­ செய்து அவரை தேடி­ய நிலையில் தலை­ம­றைவானார். மாவட்­ட குற்­றவி­யல் நீதிமன்றம் அவரை
தேடப்­ப­டும் குற்­றவா­ளி­யாக இன்று அறி­வித்­தது.

Similar News

News December 15, 2025

திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

image

சோழ­வந்தான் பகுதியில் 2020ல் நடந்த திருட்டு குற்­றத்தில் கார்த்திக் என்ற சுண்டு கார்த்திக்(20), வீரமணி(20) ஆகியோரை போலீ­சார் கைது செய்­த­னர். வாடிப்பட்டி குற்­ற­வியல் நீதிமன்­றத்தில் நடந்த இந்த வழக்கில், தீர்ப்பை நீதி­பதி செல்­லையா நேற்று வழங்­கினார். அதில் கார்த்திக், வீரமணி ஆகிய இருவருக்கும்
தலா 4 ஆண்டுகள் கடுங்­கா­வல் தண்­ட­னை­யும் தலா ரூ.
20 ஆயிரம் அப­ராதமும் விதித்து தீர்ப்­பளித்­தார்.

News December 15, 2025

மதுரை: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

image

மதுரை மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <>கிளிக் <<>>செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 15, 2025

திருமங்கலம் கால்வாயில் தவறி விழுந்தவர் பலி

image

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கொக்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சௌந்தரபாண்டி (54). இவர், செக்கானூரணி பகுதியில் உள்ள திருமங்கலம் கால்வாயில் சனிக்கிழமை தவறி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!