News December 13, 2025
மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை திருப்பாலையை சேர்ந்த சண்முகநாதனுக்கு சொந்தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிய நிலையில் தலைமறைவானார். மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவரை
தேடப்படும் குற்றவாளியாக இன்று அறிவித்தது.
Similar News
News December 15, 2025
திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

சோழவந்தான் பகுதியில் 2020ல் நடந்த திருட்டு குற்றத்தில் கார்த்திக் என்ற சுண்டு கார்த்திக்(20), வீரமணி(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், தீர்ப்பை நீதிபதி செல்லையா நேற்று வழங்கினார். அதில் கார்த்திக், வீரமணி ஆகிய இருவருக்கும்
தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ரூ.
20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
News December 15, 2025
மதுரை: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

மதுரை மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 15, 2025
திருமங்கலம் கால்வாயில் தவறி விழுந்தவர் பலி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கொக்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சௌந்தரபாண்டி (54). இவர், செக்கானூரணி பகுதியில் உள்ள திருமங்கலம் கால்வாயில் சனிக்கிழமை தவறி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


