News April 29, 2024
வரையாடு கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் ₹25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் வரையாடுகளைக் கணக்கெடுக்கும் பணி, இன்று தொடங்கி மே 1ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
Similar News
News November 15, 2025
பிஹாரில் 200+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. EC வெளியிட்டுள்ள முடிவுகளின்படி BJP 89, JD(U) 85, LJP (ராம் விலாஸ்) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. MGB கூட்டணியில் RJD 24, காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஓவைசியின் AIMIM 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை.
News November 15, 2025
நோட்டாவுடன் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சி

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி(JSP), பிஹாரில் படுதோல்வி அடைந்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட JSP பெரும்பாலான இடங்களில் டெபாஸிட்டை இழந்துள்ளது. அக்கட்சி மொத்தமாக 3.44% வாக்குகளையே பெற்றுள்ளது. அதோடு 68 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே JSP-க்கு கிடைத்துள்ளது. அரசியலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லையா?
News November 15, 2025
ராசி பலன்கள் (15.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


