News December 12, 2025
நாளை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை(டிச.13) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடுசெய்யும் விதமாக, வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்று அறிவிப்பு வெளியாகலாம்.
Similar News
News December 17, 2025
ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழிக்க மோடி திட்டம்: ராகுல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்துக்கு ராகுல் காந்தி தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வந்த மோடி, இப்போது முழுவதுமாக அகற்றிவிட்டார் என அவர் சாடியுள்ளார். ஏற்கெனவே இளைஞர்களின் வேலைவாய்ப்பை அழித்த மோடி, அடுத்ததாக ஏழை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலக்கு வைத்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
News December 17, 2025
திருப்பதி போக பிளான் இருக்கா? இதோ டிக்கெட்!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் நாளை தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு டிச. 24-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பெறவும், மேலும் விவரங்களை அறியவும் இங்கே <
News December 17, 2025
காலையில் எழுந்தவுடன் இந்த தப்பை பண்ணாதீங்க

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் 80% பேர் தினமும் காலையில், குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது படுக்கையில் மொபைல் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த பழக்கம் நமக்கே தெரியாமல் நமது உடல் மற்றும் மனநலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, நாளடைவில் கவனச்சிதறல் அதிகரிப்பு, மன அழுத்தம், தலைவலி, பார்வையில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இதனால் ஏற்படுமாம். SHARE IT


