News December 12, 2025

பெரம்பலூர்: மனநலம் பதித்தவரை மீட்ட பாதுகாப்பு குழு

image

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், மனநலம் பாதிக்கபட்டு சுற்றித் திரிந்த குஷ்பு(35) என்பவரை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மார்கிரேட் மேரி, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரான மருதமுத்து மீட்டு அவரை வேலா கருணை இல்லத்தின் நிர்வாகி அனிதாவிடம் ஒப்படைத்தார்.

Similar News

News December 13, 2025

பெரம்பலூர்: டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்

image

பெரம்பலூரை சேர்ந்த அமரஜோதி என்பவர் சென்னை செல்வதற்காக மொபைல் செயலி மூலம், தனியார் டிராவல்ஸ் பேருந்தை புக் செய்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் பேருந்து வராததால் வேறு பேருந்தில் சென்ற நிலையில், அன்று பணிக்கு விடுப்பு எடுக்கும் நிலமையானது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து தனியார் டிராவல்ஸ் பயணிக்கு ரூ.50,000, மனு செலவிற்கு ரூ.10,000 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

News December 13, 2025

பெரம்பலூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

பெரம்பலூர்: டிசம்பர் 31-க்குள் இத செய்ங்க

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் eKYC 31.12.2025-க்குள் 100% முடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டை பயனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை அடிப்படையிலான சரி பார்ப்பினை (eKYC) அவசர சிறப்பு பணியாக கருதி 31.12.2025-க்குள் 100% நிறைவு செய்ய பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!