News December 12, 2025

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ₹11,718 கோடி ஒதுக்கீடு

image

2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ₹11,718.24 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும். 2026 ஏப்ரல் – செப்டம்பரில் வீட்டுக் கணக்கெடுப்பும், 2027 பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படும். நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மேலும், இது 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.

Similar News

News December 16, 2025

10-வது படித்தால் போதும்.. ₹21,000 சம்பளத்தில் வேலை!

image

✱BSF, CISF, CRPF, ITBP உள்ளிட்ட படைப் பிரிவுகளில் உள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 10- வது தேர்ச்சி ✱வயது: 18 – 23 ✱தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும் ✱சம்பளம்: ₹21,700 – ₹69,100 ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.31 ✱விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் ✱வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யவும்.

News December 16, 2025

CSK-வில் இணைந்த அகீல் ஹோசைன்

image

IPL மினி ஏலத்தில், WI ஆல்-ரவுண்டர் அகீல் ஹோசனை ₹2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரை தேடிய CSK, தற்போது அகீல் ஹோசனை அவரது அடிப்படை ஏலத்தொகைக்கு பெற்றுள்ளது. முன்னதாக, ரவி பிஷ்னோயையும் வாங்க CSK முனைப்பு காட்டியது. ஆனால் ₹5 கோடிக்கு பிறகு, ஏலம் கேட்பதை நிறுத்திக்கொண்டது. CSK-வின் இந்த தேர்வு சரியானதா? கமெண்டல சொல்லுங்க

News December 16, 2025

BREAKING: மெஸ்ஸி விவகாரம்.. அமைச்சர் ராஜினாமா

image

கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தால், மே.வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் எனக் குறிப்பிட்டு திரிணாமூல் காங்., மூத்த தலைவர் குணால் கோஷ் இந்த தகவலை SM-ல் வெளியிட்டுள்ளார். தவறான நிர்வாக மேலாண்மை காரணமாகவே, மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்திருந்தது.

error: Content is protected !!