News December 12, 2025

புதுச்சேரி: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

Similar News

News December 24, 2025

புதுச்சேரி: முன்னாள் IFS அதிகாரி ஓசூரில் கைது

image

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், முன்னாள் (IFS) அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையின் பேரில், ஓசூர் அருகே பதுங்கி இருந்த சத்தியமூர்த்தியை, நேற்று (டிச.23) கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலிசார் விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் வழக்கில், மேலும் சிலர் தொடர்புடையிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News December 24, 2025

புதுச்சேரி: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன!

image

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய புதுச்சேரி மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க. (<<18660273>>தொடர்ச்சி<<>>)

News December 24, 2025

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

image

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!