News December 12, 2025
தனி நபர் தீபமேற்ற முடியாது: அரசு தரப்பு வாதம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, மதுரை HC அமர்வில் தொடங்கியது. இதில் உச்சி பிள்ளையார் கோயில் தவிர, தனிநபராக வேறு எந்த இடத்திலும் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News December 27, 2025
மதுரை அருகே 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மருது பாண்டி 19. இவர் நேற்று மாலை வெளியில் சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்த பொழுது அவரது தந்தை தாயாருடன் தகராறு செய்வதை பார்த்து கண்டித்துள்ளார். இது தொடர்பாக தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மனம் உடைந்த மருதுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 27, 2025
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ₹20,000 விலை மாறியது

தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. <<18682690>>தங்கம் இன்று சவரனுக்கு ₹880<<>> உயர்ந்த நிலையில், வெள்ளி கிலோவுக்கு ₹20,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹274-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,74,000-க்கும் விற்பனையாகிறது. இது முதலீடு நோக்கத்தில் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
News December 27, 2025
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்: சேகர்பாபு

பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் என H.ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘அத்தைக்கு மீளை முளைத்தால் தான் அவர் சித்தப்பா; முதலில் அவரை ஒரு தொகுதியில் நின்று வெல்ல சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டார். H.ராஜாவுக்கு எதிராக திமுக சாதாரண தொண்டனை நிறுத்தி மண்ணை கவ்வ வைக்கும் என்றும் கூறினார். பாஜக அவரை கண்டுகொள்ளாததால் இப்படி பேசிவருவதாகவும் தெரிவித்தார்.


