News December 12, 2025
மக்கள் நாயகன் காலமானார்

‘பறவை மனிதர்’ என அன்போடு அழைக்கப்பட்ட ஜோசப் சேகர் காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் அளிக்கும் உணவுக்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் குறிப்பாக கிளிகள் தேடி வரத்தொடங்கின. 20 ஆண்டுகளாக இந்த உன்னத பணியை செய்து வந்த அவர், கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும் உணவு அளித்து மக்களின் நாயகன் ஆனார். ஜோசப் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News December 25, 2025
தவெக + காங்., கூட்டணி: முடிவை தெரிவித்தார்

சமீபகாலமாக காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்த உண்மையை தற்போது செங்கோட்டையன் போட்டு உடைத்திருக்கிறார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் தவெகவுக்கு இல்லை என ஓபனாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், திமுக காங்கிரஸ் கூட்டணியில் உருவான புயல் சற்று வலுவிழந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 25, 2025
ஒரே வீட்டில் 44 பேர் எரித்து கொலை.. ஓயாத ஓலம்

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
News December 25, 2025
கிறிஸ்துமஸ் வழிபாட்டில் PM மோடி

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, டெல்லி ரிடெம்ப்ஷன் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் PM மோடி பங்கேற்றார். இதுபற்றிய அவரது X பதிவில், கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டது அன்பு, அமைதி, கருணை எனும் காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளின் உணர்வுகள், சமூகத்தில் நல்லெண்ணத்தையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


