News December 12, 2025

சபரிமலையில் மேலும் ஒரு தமிழர் உள்பட 19 பேர் மரணம்

image

சபரிமலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பக்தர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வமணி(40) என்ற பக்தர் மலைப்பாதையில் மயங்கி விழுந்த போது உயிர் பிரிந்துள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், TN-ல் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். நடப்பு சீசனில் கோவை, கடலூரை சேர்ந்த பக்தர்கள் உட்பட 19 பேர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News March 12, 2026

இந்திய கப்பல்களுக்கு அனுமதியா? ஈரான் மறுப்பு

image

ஹார்முஸ் வழியாக புறப்பட்ட முதல் <<19360931>>எண்ணெய் கப்பல்<<>>(SHENLONG) மும்பையை அடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இனி பிரச்னை படிப்படியாகும் குறையும் என பெருமூச்சு விடுவதற்குள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது ஈரான். அதாவது, ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் செல்ல எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஈரான் மறுத்ததாக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

News March 12, 2026

அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

image

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.

News March 12, 2026

மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

image

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!