News December 12, 2025
சுப்பிரமணியபுரத்தில் திமுக பிரச்சாரம்

அம்பாசமுத்திரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வார்டு கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு திமுக அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலர் ஆவுடையப்பன் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து திமுக அரசின் சாதனை விளக்க பிரசுரங்களை வழங்கினார்.
Similar News
News December 13, 2025
நெல்லை பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பகுதி தூரம் ரத்து

தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் டிச.15 முதல் பிட்லைன் மற்றும் இன்டர்லாக்கிங் பணிகள் தொடங்க உள்ளது. இதனால், பல ரயில்கள் பகுதி மற்றும் முழு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் டிச.15 – ஜன.28 வரை நெல்லை – தூத்துக்குடி இடையே ரத்து. மைசூரு எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை வாஞ்சிமணியாச்சி வரை மட்டும் இயங்கும். பல பாசஞ்சர் ரயில்களும் டிச.17 முதல் டிச.23 வரை ரத்து செய்யப்பட்டுளளது.
News December 13, 2025
நெல்லை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

திருநெல்வேலி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 13, 2025
தூத்துக்குடி: மனைவி பிரிந்த சோகத்தால் கணவர் தற்கொலை

மானூர் அருகே அலவந்தான்குளத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பெல்கிஸ் (51). இவருக்கும் இவரது மனைவி அந்தோணியம்மாளுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துவந்தார். மனைவியை பிரிந்த சோகத்தில் பெல்கிஸ் கடந்த 10ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர் நெல்லை G.H-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


