News December 12, 2025
கடலூர்: ஆம்லெட் கிடைக்காததால் தற்கொலை!

நெல்லிக்குப்பம், திருகண்டேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி செந்தில்குமார் (49). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம் ஆம்லெட் போட்டு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் ஆம்லெட் போடாததால் விரக்தி அடைந்த அவர், தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
கடலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!
News December 17, 2025
கடலூர் மாவட்டத்தின் நாளைய பவர் கட் விபரம்

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் சித்தரச்சூர், மேல்பட்டாம்பாக்கம், மணலுார், பண்ருட்டி கிராம பகுதி, திருவாமூர், அண்ணாகிராமம், கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, கோ.பூவனூர், ஆலடி, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனூர், ஏ. கே. பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 17, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மொழித்தொண்டு, கலை, அறிவியல், கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) ஆண்டுதோறும் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதிவாய்ந்த மகளிர் கடலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் வரும் 10.1.2026-க்குள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


