News December 12, 2025
சிவகங்கை: இணை இயக்குநர் அலுவலகத்தில் வேலை ரெடி!

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் காலியாக உள்ள செவித்திறன் ஆய்வாளர், அறுவை அரங்கு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனையில் டிச.30க்குள் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
காரைக்குடி: பூட்டை உடைத்து நகை திருட்டு.. தொழிலாளி கைது

காரைக்குடி அருகே கோட்டையூர் அருணாசலம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான தோட்டம் மணச்சை பகுதியில் உள்ளது. இங்கு காரைக்குடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து, 5 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் தினகரன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவன் நகையை ரவிச்சந்திரன் திருடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
News December 18, 2025
சிவகங்கை: தந்தை மூளைச்சாவு.. குடும்பத்தார் நெகிழ்ச்சி செயல்

சிங்கம்புணரி அருகே ஏரியூரைச் சேர்ந்த கட்டட பொறியாளர் எஸ்.குமரப்பன் (55) மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிச.16ல் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் சம்மதத்துடன் குமரப்பனின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டது.
News December 18, 2025
சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்னான +91-9013151515-ஐ SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


