News December 12, 2025
ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!

மும்பை தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. இதில், சென்செக்ஸ் 352 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 85,170 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 26,007-ஐ எட்டியுள்ளது. உலகளாவிய சந்தைகளின் வலுவான ஆதரவு காரணமாக ஏற்றம் காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உலோக பங்குகளே அதிகம் லாபம் ஈட்டி, சந்தைக்கு ஊக்கமளித்துள்ளன.
Similar News
News December 26, 2025
முதல் சம்பளத்தில் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த போது அவருக்கு 18 வயதுதான். அப்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு மேலோங்கி இருந்ததாக விஜய்யின் நண்பரும் நடிகருமான தாமு சொல்கிறார். தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் ஏழை எளியோருக்கு புடவை, உணவு பொருள்களை விஜய் வாங்கிக்கொடுத்தாராம். இந்த குணம் தான் அவருக்கு தற்போது வரை நீடிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
News December 26, 2025
பீர் பிரியர்களுக்கு.. HAPPY NEWS

பீர் குடித்தால் உடலுக்கு நல்லதல்ல என்பது பொது அறிவுரை. அதை மாற்றும் விதமாக Beer-ஐ வைத்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளார் USA ஆய்வாளர் கிறிஸ் பக். ஈஸ்ட் செல்களை வைரஸ் துகள்களுடன் இணைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தொழில்நுட்பத்தை முயற்சித்துள்ளார். இந்த பீரை குடித்து பரிசோதித்ததில், உடலில் Antibodies உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் இது ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.
News December 26, 2025
தங்கம் விலையை குறைக்க களத்தில் குதித்த பெண்கள்!

உண்மைதான்.. அரியலூர், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கம் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஞ்சள் தாலிக்கயிறை கையில் வைத்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி விலை உயர்ந்து கொண்டே சென்றால் பெண் குழந்தைகளுக்கு எப்படி திருமணம் செய்வது என கேள்வி எழுப்பிய அவர்கள், தங்க விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உங்கள் கருத்து என்ன?


