News December 12, 2025
திருவாரூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
Similar News
News December 16, 2025
திருவாரூர்: பண இழப்பை தவிர்க இத செய்ங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியரகம் விடுத்த அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கணினி தமிழ், ஒருங்குறி பண்பாடு, ஆட்சி மொழி சட்ட அரசாணை, மொழிபெயர்ச்சி, கலைச்சொல்லாக்கம் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் திருவாரூர் திரு.வி.க கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
திருவாரூர்: தமிழ் ஆசிரியருக்கு முதல்வர் விருது

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழ் ஆசிரியரும், நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளருமாகிய சண்முகசுந்தரம் ‘இயல் செல்வம்’ என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் இந்த இயல் செல்வம் விருது, முத்தமிழ் பேரவை சார்பில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினி மூலம் வழங்கப்பட்டது. இதுமட்டும் அல்லாது, முதலமைச்சரிடம் இரண்டாவது முறையாக சண்முகசுந்தரம் விருது பெறுவது குறிப்பிடத்தக்கது.


