News December 12, 2025
தருமபுரி: பள்ளி மாணவி மாயம்.. தீவிர விசாரணை!

தருமபுரி, காரிமங்கலம் திண்டல் ஊராட்சி தெள்ளன அள்ளி பகுதி சேர்ந்த 16 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று அவர் மாலை வீடு திரும்பவில்லை. அச்சத்தில், மாணவியின் பெற்றோர் நேற்று மாலை காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தருமபுரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
தருமபுரி: கல்வி உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 31-12-2025 https://umis.tn.gov.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் சதிஷ் இன்று தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு – இன்று (டிச.12) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!


