News December 12, 2025
விழுப்புரம்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 12, 2025
விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) திரு.ராமன்குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.12) நடைபெற்றது.
News December 12, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் டிச.19 காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News December 12, 2025
விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


