News April 29, 2024
பருவமழை நீரை சேமிக்க தமிழக அரசு தவறியது

வடகிழக்கு பருவமழையில் கிடைத்த நீரை, தமிழக அரசு சேமிக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மழைநீர் சேமிப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தவறியதே வறட்சிக்கு காரணம் என்றும், வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த தண்ணீர் எங்கே போனது? அவற்றை சேமித்து வைக்காததால் தான் இன்று 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 10, 2026
நெகடிவ்வாக இருப்பவர்களுக்கே வெற்றி கிடைக்குது: சரத்குமார்

நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகனாக இருக்க முடியாது என சரத்குமார் பேசியுள்ளார். ஆழி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நெகடிவ்வாக இருப்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள் என கூறியுள்ளார். மேலும், வில்லன் ஹீரோவாகவும், ஹீரோ வில்லனாகவும் இப்போது மாறிவிட்டனர் எனவும், நான் கலை உலகைத்தான் சொல்கிறேன், வேறு எதையும் புரிந்து கொள்ளாதீர்கள் என்றும் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
News February 10, 2026
ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 119 MP-க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸை அளித்தனர். ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது, பெண் MP-க்கள் மீது ஓம் பிர்லா வைத்த புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் சபாநாயகர் மீது வைத்துள்ளனர்.
News February 10, 2026
தாயின் ஆபாச போட்டோவை காதலனுக்கு அனுப்பிய பெண்

இதை படித்த பிறகு உங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட்போன் யூஸ் செய்வதை இன்னும் அதிகமாக கவனிப்பீர்கள். பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண், தனது அம்மா, பாட்டி ஆகியோரின் அந்தரங்க போட்டோஸை காதலனுக்கு அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாய் அளித்த புகாரில், மகளின் போனை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். உறவுகளை நீட்டிப்பதற்கு தொழில்நுட்பம், அழிப்பதற்கு அல்ல என்பதை உணருங்கள்.


