News December 12, 2025
கிருஷ்ணகிரி: டூவீலர் கம்பத்தில் மோதி 2 பேர் பலி!

ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சரண் இவரும் சென்னையை சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரும் இராயக்கோட்டையில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் டூவீலரில் பணி முடிந்து ஓசூரை நோக்கி வந்தபோது, வரகானப்பள்ளி என்ற இடத்தில் இருந்த கம்பத்தின் மீது மோதி சரண் சம்பவ இடத்திலும், தினேஷ் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
Similar News
News December 13, 2025
கிருஷ்ணகிரி: காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு இரவு ரோந்து பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அவசரநிலையில் தமக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, உடனடி உதவிக்கு 100 என்ற அவசர உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
News December 12, 2025
பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், விதிரா செல்ஃப்கேர் பிளஸ் திட்டத்தின் கீழ் 13 முதல் 18 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க https://awards.tn.gov.in மூலம் 20-12-2025க்குள் தனிச்சான்றுகள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
News December 12, 2025
கிருஷ்ணகிரியில் மின்கம்பி உதவியாளர் தேர்வு தேதி மாற்றம் அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 13 மற்றும் 14 டிசம்பர் 2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த மின்கம்பி இணைப்பு உதவியாளர் (Wireman Helper) தேர்வு, நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டது. புதிய தேர்வு தேதிகள் டிசம்பர் 27, 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தகுதி விவரங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


