News December 12, 2025
ராம்நாடு: டூவீலரை ரயில்வே டிராக்கில் போட்டு ஒடிய இளைஞர்

உச்சிப்புளி அருகே பூட்டியிருந்த ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனத்தை அத்துமீறி கடந்து ரயில் அருகே வந்தததால் அப்படியே பைக்கை அப்படியே போட்டு விட்டு ஒடிய உச்சிப்புளி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் டாஸ்மாக் கடையை அடைக்க நேரம் ஆனதால் கேட்டை தாண்டி தண்டவாளத்தை கடந்தாக இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
ராமநாதபுரம்: Driving Licence-க்கு முக்கிய Update!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News December 13, 2025
பரமக்குடி: முதியவர்களை கொன்ற குற்றவாளிக்கு குண்டாஸ்

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
News December 13, 2025
ராமநாதபுரம்: சிறுவனுக்கு பாலியில் தொல்லை: 20 ஆண்டு சிறை

முதுகுளத்துார் அருகே பெரியஇலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா 41. விவசாய கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு 2020 ஏப்.,30ல் அப்பகுதியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவன் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் நேற்று முருகையாவுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.5000 அபராதம், மிரட்டல் வழக்கில் ஓராண்டு சிறை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


