News April 28, 2024
நாளை இந்த 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிகமாக வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகமாக வாட்டி வதைக்கிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை அதிக வெப்பம் பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
யோகியை புகழ்ந்த MLA கட்சியில் இருந்து நீக்கம்

உ.பி. CM யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசியதற்காக, MLA பூஜாவை கட்சியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது. ரவுடிகளுக்கு எதிராக யோகி அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், தனது கணவரை கொன்ற தாதா ஆதிக் அகமதை புதைத்து தனக்கு நீதி கிடைக்க செய்ததாகவும் பூஜா கூறியிருந்தார். கடந்த 2005-ல், திருமணமான சிறிது நாள்களிலேயே பூஜாவின் கணவர் ராஜு சுட்டுக் கொல்லப்பட்டார்.
News August 14, 2025
மாஸ்டர் பட காட்சியை காப்பி அடித்த WAR 2..

லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்திற்கு போட்டியாக Jr.NTR-ன் ‘WAR-2’ திரைப்படமும் இன்று வெளியானது. படத்தில் Jr.NTR-ரும் ஹ்ரித்திக் ரோஷனும் சண்டையிடுவது போன்ற காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குநர் அயான். அக்காட்சி லோகேஷ் கனகராஜின் ’மாஸ்டர்’ படத்தில் கையில் காப்பு வைத்து விஜய்சேதுபதியை விஜய் தாக்கும் காட்சியை போல இருப்பதாகவும், ’WAR-2’ இயக்குநர் காப்பி அடித்துவிட்டதாகவும் கமண்ட்ஸ் வருகின்றனர்.
News August 14, 2025
Gpay, Phonepeல் இனி இந்த வசதி கிடையாது!

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்கத் தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியில் REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது. வட போச்சே!