News December 12, 2025
கரூர்: ஆற்று மணல் மூட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை ஆண்டியப்பன் நகர் அருகே லாலாபேட்டை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அரசு அனுமதி இன்றி மினி வேனில் ஆற்று மணலை மூட்டைகளாக கடத்தி வந்தது தெரியவந்தது. பிறகு மணல் கடத்தலில் ஈடுபட்ட மேட்டு திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் பாலகுமார் (26) என்ற கொத்தனார் தொழிலாளி மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 29, 2025
JUST IN: கரூரில் பிரபல நடிகை மீது வழக்கு!

கரூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் ரூபாய் பணம், பிஎம்டபிள்யூ கார், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ராணி அவரது கணவர் பாலாஜி, பாலாஜியின் நண்பர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 29, 2025
BREAKING: அரவக்குறிச்சியில் அதிரடி காட்டிய செங்கோட்டையன்!

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரியமுல் ஆசியா இன்று அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.செங்கோட்டையன் கட்சியின் இணைந்த நாள் முதலே அதிமுகவில் உள்ள பலர் தவெக இனைவார்கள் என தெரிவித்தார். அதன்படி நேற்று அதிமுக ஓமலூர் EX எம்எல்ஏ இணைந்தநிலையில் தற்போது மரியமுல் ஆசியா இணைந்துள்ளார்.
News December 29, 2025
கரூர் மாவட்டத்தில் 4 பேர் அதிரடி கைது!

கரூர், பசுபதிபாளையம், க. பரமத்தி, வாங்கல் ஆகிய காவல்நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற விக்கி (36), மாரியம்மாள் (67), அன்பழகன் (48), மலர்கொடி (55) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


