News December 12, 2025

கோர விபத்தில் 22 பேர் பலி.. PM மோடி இரங்கல்

image

அருணாசல பிரதேசத்தில் இந்திய – சீன எல்லையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் டிரக் கவிழ்ந்த <<18533109>>விபத்தில்<<>> 22 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் & காயமடைந்தோருக்கு ₹50 ஆயிரமும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2026

மேட்ச் தோற்றாலும் CSK-ன் மாஸ் ரெக்கார்டு!

image

பொதுவாக IPL அதிக ரன்களை விளாசும் அணிகள் எது என்று கேட்டால், பல ரசிகர்களும் SRH, RCB, MI போன்ற அணிகளை குறிப்பிடுவார்கள். ஆனால், அதிகமுறை 200+ ரன்களை விளாசியுள்ளது CSK தான். நேற்றைய RCB-க்கு எதிரான 207 ஸ்கோரையும் சேர்த்து, இதுவரை 37 முறை CSK 200+ ரன்களை விளாசி உள்ளது. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் RCB(36), 3-வது இடத்தில் PBKS(33), 4-வது இடத்தில் MI(32) ஆகிய அணிகள் உள்ளன.

News April 6, 2026

தேர்தல் புறக்கணிப்பு.. அடுத்த சர்ச்சை வெடித்தது!

image

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டையே உலுக்கிய விவகாரம் என்றால் வேங்கைவயல் பிரச்னைதான். இந்நிலையில், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததை கண்டித்தும், பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிகளாக சித்தரிப்பதை கண்டித்தும் வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கைவயல் பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர். இந்த தேர்தல் புறக்கணிப்பு திமுகவை வீழ்த்தும் என அன்புமணி கூறியுள்ளார்.

News April 6, 2026

BREAKING: ஜாபர் சாதிக் வீட்டில் IT ரெய்டு!

image

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக EX நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் IT, தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் உள்ள அவரது விடுதி, பட்டினப்பாக்கத்தில் உள்ள வீடுகளில் நடத்தப்படும் இந்த சோதனையால் பரபரப்பு தொற்றியுள்ளது. தேர்தலுக்கான பணப்பட்டுவாடா சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!