News December 11, 2025
குமரி மாவட்டத்தில் புதிதாக 212 வாக்குச்சாவடிகள் அமைப்பு

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 212 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் 1702 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனுடன் சேர்த்து மாவட்டத்தில் தற்போது 1914 வாக்குச்சாவடிகள் உள்ளன.
Similar News
News December 27, 2025
குமரி: ஆற்றில் குதித்த புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

முதுகுமெல் பகுதியை சேர்ந்த இவாஞ்ஜெறி (28) சட்டம் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. இந்நிலையில் இவாஞ்ஜெறி டிச.24ம் தேதி குழித்துறையில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதியில் மது அருந்தி கொண்டிருந்த நிலையில் போதை தலைக்கு ஏறியதால் தாமிரபரணி ஆற்றில் குதித்தார். 2 நாட்களாக தீயணைப்புத் துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று கமுகனூர் ஆற்றில் சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News December 27, 2025
குமரி: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை..!

குமரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <
News December 27, 2025
பொது விநியோகத் திட்ட குழுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

அரசின் பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழுவின் பதவிக்காலம் கடந்த அக்., மாதம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய குழுவில் சேர்வதற்கு பெண்கள், நுகர்வோர், பெருமைமிக்க நபர்கள் (ம) ஆதரவற்றோர் விண்ணப்பிக்கலாம். இதில் 5 பேர் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளோர் டிச.31ஆம் தேதிக்குள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


