News December 11, 2025

அமித்ஷா மன அழுத்தத்தில் உள்ளார்: ராகுல் காந்தி

image

லோக்சபாவில் நேற்று நடந்த SIR குறித்த விவாதத்தின் போது <<18524191>>ராகுல், அமித்ஷா இடையே<<>> வார்த்தை மோதல் வெடித்தது. இந்நிலையில் அமித்ஷா மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை நேற்று நாடே பார்த்ததாக ராகுல் தெரிவித்துள்ளார். விவாதத்தின் போது பதற்றமாக இருந்ததால் அமித்ஷாவின் கைகள் நடுங்கியதாகவும், தகாத வார்த்தைகளை அவர் பேசியதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார். தனது சவாலுக்கு அமித்ஷா பதில் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 8, 2026

ஸ்டாலின் தான் EPS-யிடம் கைக்கட்டி கெஞ்சினார்: காயத்ரி

image

உதயநிதிக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் பேசிய அவர், ​உதயநிதி தனது பிரசாரத்தில் சசிகலா காலில் EPS விழுந்த மாதிரி ஒரு போட்டோ காண்பிக்கிறார். ஆனால் ​அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர் காலில் விழுந்தார்கள் தெரியுமா என கேள்வி எழுப்பினார். ஸ்டாலின்தான் மெரினாவில் ஒரு இடத்துக்காக EPS-யிடம் கைகட்டி கெஞ்சி கேட்டார் எனவும் சாடியுள்ளார்.

News April 8, 2026

ஏப்ரல் 8: வரலாற்றில் இன்று

image

▶1950 – இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ▶1970 – இஸ்ரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசி 46 குழந்தைளை படுகொலை செய்தது. ▶1917 – தமிழக கர்நாடக வீணை கலைஞர் எஸ். இராமநாதன் பிறந்தநாள் ▶1894 – கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவுதினம். ▶2015 – தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவுதினம்.

News April 8, 2026

போர் பீதியால் வளைகுடா நாடுகளில் எச்சரிக்கை!

image

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பீதியால் வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதன்படி குவைத் தனது மக்களை 6 மணி நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பஹ்ரைன் அரசு, மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கோரியுள்ளது. கத்தாரில் அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகமும் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!