News April 28, 2024
நாம் உயிரோடு இருக்க மோடிதான் காரணம்

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது, இலவசத் தடுப்பூசியால் உயிர்கள் காக்கப்பட்டதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். பெதுல் என்னுமிடத்தில் பிரசாரம் செய்த அவர், கொரோனா காலத்தில் உலகமே நெருக்கடியைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். இருப்பினும், பாஜக அரசு இலவசத் தடுப்பூசி மற்றும் ரேஷன் கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மக்கள் உயிரோடு இருக்கவே பிரதமர்தான் காரணம் என்றார்.
Similar News
News February 17, 2026
அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனா மாமியார்

சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்த லீமா ரோஸ் மார்ட்டின், தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஐஜேகேவில் 14 ஆண்டுகளுக்கு மேல் இருந்த அவர், இணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார். ஆனால், கட்சித் தலைமை தன்னை புறக்கணிப்பதாகவும், சமீபத்தில் நடந்த மாநாட்டிற்கு கூட அழைக்கவில்லை எனவும் கூறி ஐஜேகேவில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
News February 17, 2026
விஜய்க்கு பச்சை கொடி காட்டிய போலீஸ்

வேலூர் அகரம்சேரி பகுதியில் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறவிருக்கும் விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடக்கும் இந்த பரப்புரை கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், <<19134315>>சேலம் துயரம்போல்<<>> நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 17, 2026
தமிழகத்தில் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1.37 லட்சம் கடன்

2026-27 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ₹10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தரவுகளின்படி, தமிழக மக்கள்தொகை 7 கோடியே 72 லட்சமாக இருக்குமென கருதப்படுகிறது. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் சராசரியாக ₹1.37 லட்சம் மறைமுக கடன் சுமை உள்ளது. உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.


