News December 11, 2025
ஆத்தூர் அருகே கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

சேலம்: தம்மம்பட்டி அருகே மேல் கணவாய்க் காடு பகுதியில் இன்று லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மல்லியகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 20, 2025
JUST IN: சேலத்தில் வசமாக சிக்கிய அரசு அதிகாரி!

சேலம்: கோரிமேடு மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் இளையராஜா, புதிய மின் இணைப்பு வழங்க சுகன்யா என்பவரிடம் ரூ. 8,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப் கைது செய்யப்பட்டார். இதே போல் உங்களிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், 0427-2418735 என்ற சேலம் லஞ்சம் ஒழிப்புப் போலீசார் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும். இதனை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
சேலம்: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். (வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News December 20, 2025
ஆத்தூர்: மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி

ஆத்தூரைச் சேர்ந்தவர் செல்லப்பன் (70). இவர் ஆணைகல்மேட்டில் உள்ள ஏரியில் பழைய பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்தார். அப்போது தீ வைத்து எரிந்து கொண்டிருந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை எடுக்க முயன்றார். அப்போது மர்ம பொருள் வெடித்து, செல்லப்பன் மீது கண்ணாடி துகள்கள் சிதறியதோடு, தீப்பற்றியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தார்.


