News December 11, 2025

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

தமிழ்நாடு அரசு 1995ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பணிபுரிந்தவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற https://theni.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக 18.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் பிரதமரின் கவுரத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது 21வது தவணையில் 26,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 22,661 பேர் விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்துள்ளனர். இதில் 3640 பேர் அடையாள அட்டை பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்யாவிட்டால் 22வது தவணை கவுரத்தொகை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அடையாள அட்டை பெற விண்ணபிக்குமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தல்.

News December 13, 2025

தேனியில் தொழிலாளியை மிரட்டிய இளைஞர் கைது

image

போடி ஜமீன்தோப்பு தெருவை சோ்ந்தவா் கௌதம். இவரை ஒரு வழக்கில் காட்டிக்கொடுத்ததாக அதே பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரனை கல்லால் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் உள்ளது. இந்நிலையில் பிரபாகனிடம் புகாரை திரும்பபெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரபாகரன் சட்டை பையில் பணத்தை எடுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸாா் கௌதம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

News December 13, 2025

தேனி: ஏலக்காய் வியாபாரிக்கு கொலை மிரட்டல்!

image

போடி சடையாண்டி தெருவை சேர்ந்த சதீஸ்குமாரும், சந்தைப்பேட்டை தெருவை சோ்ந்த நவீன்குமாரும் சோ்ந்து ஏலக்காய் வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில் நவீன்குமாா், சதீஸ்குமாரிடம் 500 கிலோ ஏலக்காய்களை வாங்கியுள்ளார். இதற்கான பணத்தை சதீஸ்குமாா் கேட்ட போது ஏற்பட்ட பிரச்சனையில் நவீன்குமாா், சதீஸ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போடி போலீஸாா் நவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை.

error: Content is protected !!