News December 11, 2025
Ro-Ko கான்ட்ராக்டை மாற்றுகிறதா BCCI?

Ro-Ko ஆகியோரின் சம்பள ஒப்பந்தத்தில் விரைவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தற்போது A+ பிரிவில் (ஆண்டுக்கு ₹7 கோடி) உள்ளனர். ஆனால், இந்தியாவுக்காக 3 வகை கிரிக்கெட்டிலும் விளையாடுபவருக்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 22-ம் தேதி BCCI-ன் வருடாந்தர பொதுக்குழு கூட்டத்தில், இவர்களின் கான்ட்ராக்ட் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
Similar News
News March 11, 2026
‘அம்மா.. நான் சாகப் போகிறேன்’

மும்பையில் காதலன் கொடுத்த மென்டல் டார்ச்சரால், 6 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக புத்தி கொண்ட காதலன், மாணவி ஸ்துதி சோனாவானேவை(24) தொடர்ந்து மனதளவில் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை உணருங்கள் நண்பர்களே!
News March 11, 2026
போர் எதிரொலி.. தீப்பெட்டி விலை உயர்ந்தது

தீப்பெட்டி தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான Paraffin Wax-ஐ (மெழுகு) ஈரானிடம் இருந்து இந்தியா அதிகளவில் வாங்கி வந்தது. போர் காரணமாக ஈரானில் இருந்து இந்தியாவிற்கு மெழுகை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அதன் விலை ஒரு கிலோவுக்கு ₹80-ல் இருந்து ₹130 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கோவில்பட்டியில் உற்பத்தியாகும் தீப்பெட்டி பண்டல் ஒன்றின் விலை ₹20 ஆக உயர்ந்துள்ளது.
News March 11, 2026
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் விறகு விலை

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் விறகு அடுப்பில் சமைப்பதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், விறகு விலையும் டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 1 டன் விற்கப்பட்ட விறகு, தற்போது 10 டன் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால், விறகு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். உங்க பகுதியில் எப்படி?


