News December 11, 2025
நாமக்கல்லில் கோர விபத்து; ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல்நிலையம் அருகே டிசம்பர் 10 அன்று இரவு 10 மணியளவில், சாலையின் ஓரமாக நின்ற லாரியின் பின்புறம் ஒரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் நல்லூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். உடன் வந்த மற்றொருவருக்கு முகம் மற்றும் கை–கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்துக்குறித்து எலச்சிப்பாளையம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News March 11, 2026
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 11, 2026
நாமக்கல்: அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா?

நாமக்கல் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News March 11, 2026
நாமக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


