News December 11, 2025

ராணிப்பேட்டை: முதியவர் நீரில் மூழ்கி பலி!

image

மேல்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(83). வள்ளிமலையில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பொன்னையாற்றை கடக்க முயன்றார். அப்போது, ஆற்றின் ஆழம் தெரியாமல் காலை விட்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Similar News

News December 26, 2025

ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலையில் மர்ம சாவு!

image

மேல்விஷாரம் டிஎம்ஷாப் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று(டிச.26) திடீரென தொழிற்சாலைக்குள் உயிர் இழந்தார் .அவரது உறவினர்கள் தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் உடலை வாங்கவும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ரத்தினகிரி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

ராணிப்பேட்டை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News December 26, 2025

ராணிப்பேட்டை: பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

image

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். SHARE NOW

error: Content is protected !!