News December 11, 2025
நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் துவக்கம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலையில் 10, 12 ம் வகுப்புகளுக்கும் பிற்பகலில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடைபெற்றது. 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 15ஆம் தேதி தொடங்குகிறது.
Similar News
News December 27, 2025
நெல்லை: போலீசாரை வெட்ட முயற்சி; இருவருக்கு வலைவீச்சு

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார், நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய சுரேஷ், ஐயப்பன் ஆகியோரைப் பிடிக்க முயன்றனர். போலீசாரை அவதூறாக பேசிய இருவரும் அரிவாளால் வெட்ட முயன்று தப்பி ஓடினர். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த களக்காடு போலீசார், ரவுடி சுரேஷ் உட்பட இருவரையும் தேடி வருகின்றனர்.
News December 27, 2025
நெல்லை: போலீசாரை தாக்கிய இருவர் கைது

பாளை தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் தலைமையில் காவலர் கார்த்திக் ராஜா, அரியகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிகுளம் பாலசுந்தர் என்பவர் வந்த ஆட்டோவை நிறுத்திய போது காவலர் கார்த்திக் ராஜாவை தனது தந்தை சகோதரருடன் சேர்ந்து தாக்கினார் இது குறித்து போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து பாலசுந்தர் அவரது சகோதரர் கனகராஜை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
News December 27, 2025
நெல்லை: ரூ.3 லட்சத்தில் RBI வேலை

நெல்லை மக்களே; இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு ‘சி’ ஒப்பந்த அடிப்படையில் 77 காலியிடங்களுக்கு (ஐடி, வளாகம், மேற்பார்வை துறைகள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிஇ/பிடெக், எம்பிஏ, சிஏ உள்ளிட்ட தகுதி மற்றும் அனுபவம் அவசியம். 21 – 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு சம்பளம் ரூ.3.10 – 6 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2026 வரை. விண்ணப்பிக்க<


